தமிழகத்தில் இன்று
பாட்னா:
பீகார் மாநிலம் ராகோபூர் தொகுதியில் தன் கணவரும், முன்னாள் முதல்வருமான லல்லுபிரசாத் யாதவ் பெற்றஓட்டுக்களை விட அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பிகார் முதல்வர் ராப்ரி தேவி.
26 ம் தேதி பீகாரில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.இதில் ரகோபூர் தொகுதியும் ஒன்று.மாதேபுரா தொகுதியிலும் வெற்றி பெற்றதால் ரகோபூர் தொகுதியை முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ்ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் அவரது மனைவியும், முதல்வருமான ராப்ரி தேவி போட்டியிட்டார்.
ராப்ரி தேவி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீரா தேவியை விட61,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ராப்ரிதேவிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 768ஓட்டுக்களும், பீராதேவிக்கு 46 ஆயிரத்து 949 ஓட்டுக்களும் கிடைத்தன.
கடந்த தேர்தலில் இதே தொகுதியில் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள வேட்பாளரை விட 29 ஆயிரம்ஓட்டுக்களே அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கணவரை மிஞ்சியுள்ளார் ராப்ரிதேவி.












Click it and Unblock the Notifications