For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
கண்ணிவெடியில் சிக்கி 33 ராணுவத்தினர் சாவு

கொழும்பு:

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடி வரும் இலங்கை ராணுவத்தினரின் வாகனம், கண்ணி வெடியில் சிக்கிவிபத்துக்குள்ளானதில் 33 பேர் இறந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.

வவுனியாவில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நேர்ந்தது. யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும் அதைத் தடுக்கும்பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடந்த பல நாட்களாகக் கடும் சண்டை நடந்து வருகிறது. பலத்த சண்டை காரணமாக இருதரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இலங்கை ராணுவத்தினரின் வாகனம், புலிகள் பதிந்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், 33 ராணுவத்தினர்இறந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.

ஆனால், பூவரசன்குளத்திலிருந்து வவுனியாக்குச் சென்று கொண்டிருந்த அந்த ராணுவ வாகனம் கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும், அதில் 8ராணுவத்தினர் பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சாவகச்சேரி, அரியாலி, சரசாலி ஆகிய பகுதிகளை நோக்கி புலிகள் வேகமாக முன்னேறி வருவதை அடுத்து, அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் பலத்தசண்டை நடந்து வருகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X