செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ராமநாதபுரம்:
ராம-ந-ா-த-பு-ரம் அரு-கே எஸ்.பி.பட்-ட-ணம் என்-ற இ-டத்-தில் சந்-தே-கத்-திற்-கு இட-மா-ன வகை-யில் திரிந்-த ஐந்-து இலங்-கைத் தமி-ழர்-கள்கை-து செய்-யப்-பட்-ட-னர்.
இலங்கைப் போர் உச்சகட்டத்தில் இருக்க, போராளிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க ராமநாதபுரம், தொண்டி, வேதாரண்யம்,எஸ்.பி.பட்டிணம் ஆகிய பகுதிகளில் கடற்படையினர் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்-வாய்க்-கி-ழ-மை எஸ்.பி. பட்டணம் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில்5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 5 பேரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. பிடிபட்ட5 பேரையும் கடற்படையினர் எஸ்.பி.பட்டணம் போலீஸில் ஒப்படைத்தனர்.
அல்போன்ஸ் , அகஸ்தீன், கருப்பையா, சகாயதாசன், அந்தோணிபிள்ளை. இவர்கள் 5 பேரும் மீன் பிடிக்க வந்ததாகவும், திசை மாறி வந்து விட்டதாகவும்தெரிவித்தனர். அவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் அத்து மீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். போராளிகளுக்கு பொருட்கள் கடத்திசெல்ல வந்தவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications