செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ராமநாதபுரம்:
ராம-ந-ா-த-பு-ரம் அரு-கே எஸ்.பி.பட்-ட-ணம் என்-ற இ-டத்-தில் சந்-தே-கத்-திற்-கு இட-மா-ன வகை-யில் திரிந்-த ஐந்-து இலங்-கைத் தமி-ழர்-கள்கை-து செய்-யப்-பட்-ட-னர்.
இலங்கைப் போர் உச்சகட்டத்தில் இருக்க, போராளிகள் தமிழ்நாட்டுக்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க ராமநாதபுரம், தொண்டி, வேதாரண்யம்,எஸ்.பி.பட்டிணம் ஆகிய பகுதிகளில் கடற்படையினர் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்-வாய்க்-கி-ழ-மை எஸ்.பி. பட்டணம் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில்5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் 5 பேரும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. பிடிபட்ட5 பேரையும் கடற்படையினர் எஸ்.பி.பட்டணம் போலீஸில் ஒப்படைத்தனர்.
அல்போன்ஸ் , அகஸ்தீன், கருப்பையா, சகாயதாசன், அந்தோணிபிள்ளை. இவர்கள் 5 பேரும் மீன் பிடிக்க வந்ததாகவும், திசை மாறி வந்து விட்டதாகவும்தெரிவித்தனர். அவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் அத்து மீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். போராளிகளுக்கு பொருட்கள் கடத்திசெல்ல வந்தவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.