தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவரும் சாவு
கோவை:
திருப்பூரில் தங்கச் சங்கிலி தொலைந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன், தானும் தீயில் கருகிபலியானார்.
திருப்பூர் சித்தன் நகரில் குடியிருந்தவர் அய்யப்பன் (35). இவரது மனைவி கலைச் செல்வி (30). கலைச் செல்வி அணிந்திருந்த செயினை காணாத கணவர் அய்யப்பன்அது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மனைவி மீது ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் தீப்பற்றிக் கொண்ட கலைச்செல்வி, அய்யப்பனைக் கட்டிப் பிடித்துள்ளார். இதனால் இருவரும் தீயில் கருகினர்.
தீக்காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications