செயலை விட அதன் பயனை நேசித்தால்!
பிஜியில் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால பிரதமரை ஏற்க, முதலில் புரட்சி நடத்திய தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ராஜினாமா செய்த அதிபர் மாராவின் மருமகன நைலதிகாவ், செவ்வாய்க்கிழமை பிஜித் தீவின் தற்காலிக பிரதமராக அறிவிக்கப்பட்டார். அதற்குமுன்பாக இந்தியர்கள் பிரதமர் பதவிக்கு வர வகை செய்யும் அரசியல் சட்டத்தை ராணுவ ஆட்சியாளர் பைனிமராமா ரத்து செய்தார்.
இந்த நிலையில், புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள நைலதிகாவை ஏற்க ஜார்ஜ் ஸ்பீட் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. நைலதிகாவின்மனைவியும் தற்போது ஜார்ஜ் ஸ்பீடின் பிடியில் பினைக் கைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் அறிவிப்பு புதன்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்தராணுவத் தலைமையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவே புதிய பிரதமர் அறிவிப்பு தாமதமாகும்என்றார். தன்னையும், தனது ஆதரவாளர்களையும் கலந்து பேசாமல் தற்காலிக பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் ஸ்பீட் கூறியதாக பிஜிரேடியோ தெரிவித்தது.
இதற்கிடையில், ஜார்ஜ் ஸ்பீட், பெரும் குற்றம் செய்திருந்தாலும், அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராணுவத்தளபதி மைனிமராமா கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications