செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Subscribe to Oneindia Tamil
ப்ளஸ் டூ மதிப்பெண் பட்டியல் ஜூன் 7-ம் தேதி வழங்கப்படும்

சென்னை:

ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 7 ம் தேதி வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குநர்பரமசிவன் தெரிவித்துள்ளார்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பற்றி சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வழங்கப்படும்.

மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால் மறுகூட்டல் 14 ம் தேதி அவர்கள் எழுதிய மையத்தின் மூலம் வழங்கப்படும். மதிப்பெண்ணில் சந்தேகம் இருந்தால்மறுகூட்டல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய விண்ணப்பங்கள் ஜூன் 14 ம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநர் அலுவலகம் வந்து சேர வேண்டும். தனித்தேர்வர்களின் மறுகூட்டல்விண்ணப்பம் ஜூன் 21 ம் தேதிக்குள் வர வேண்டும். இதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாண்டு முதல் மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழ் மொழியிலும் விவரங்கள் இடம் பெ-றும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சான்றிதழ்கள்அச்சடிக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு மதிப்பெண் சான்றிதழ்களில் ஹோலோகிராம் என அழைக்கப்படும் முப்பரிமான வில்லைஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலிச் சான்றிதழ்களின் நடமாட்டத்தை அறவே களைந்திட முடியும் என்று நம்புகிறோம்என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+