செயலை விட அதன் பயனை நேசித்தால்!
Subscribe to Oneindia Tamil
கோவையில் சுதாகரன் பாதயாத்திரை
கோவை:
சின்ன எம்.ஜி.ஆர் என அழைத்துக் கொள்ளும் அ.தி.மு.க பொதுச் செயலர்ஜெயலலிதாவின்
மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் கோவையில் புதன்கிழமை பாதயாத்திரையைதுவக்கினார்.
கோவையிலிருந்து ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலுக்குபாதயாத்திரை செல்ல சுதாகரன் கோவை வந்தார்.
ஓட்டல் ரெசிடென்சியில் தங்கியிருந்த அவர், புதன் காலை பேரூர் பட்டீஸ்வரர்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அங்கு 5 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தார்.
பின்னர் இன்று மாலை கோவை தண்டுமாரியம்மன் கோயிலிலிருந்து தனது"ஆன்மிக அரசியல் பாத யாத்திரையைத் துவக்கினார். ஆனைமலையில் உள்ளமாசாணியம்மன் கோயிலில் தனது யாத்திரையை முடிக்கிறார்.












Click it and Unblock the Notifications