For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
காஞ்சிபுரத்தில் அதிமுக தொண்டர் வெட்டிக் கொலை
சென்னை:
அதிமுக தொண்டர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே மணிவாக்கம் என்ற இடத்தில் புதன்கிழமை நள்ளிரவு நடந்தது.
காட்டன்களத்தூர் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினராக இருப்பவர் பொன்னுரங்கம். வயது 42. இவர் அதிமுக தொண்டர். இவர் அங்கு நடந்த பஞ்சாயத்துக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் ஆள்நடமாட்டமில்லாத அப்பகுதியில் அவரைவெட்டிக்கொலை செய்து விட்டு தப்பித்து விட்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நடுரோட்டில் நடந்த இக்கொலையை அடுத்து அப்பகுதி முழுவதும் பதட்டம் காணப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 1, 2000, 5:30 [IST]