தமிழகத்தில் இன்று
தமி-ழர் அமைப்பு அளித்த விருந்தில் கலந்து கொண்-ட கனடா அமைச்சருக்குக் கண்டனம்
டொரான்டோ:
விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட கனடா நாட்டு அமைச்சருக்கு அந்நாட்டு நாடாளுமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பு என்ற அமைப்பு சமீபத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், கலந்து கொள்ள கனடா நிதிஅமைச்சர் பால் மார்ட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் விருந்தில் கலந்து கொண்டார்.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பை, தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அந்த அமைப்புசெயல்படுவதாகும், புலிகளின் அமைப்புக்கு நிதி திரட்டுவதில் அந்த அமைப்பு தீவிரமாக இருப்பதாகவும் கூறி அதை தீவிரவாத அமைப்பாகஅமெரிக்கா அறிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதற்காக அமைச்சர் பால் மார்ட்டினுக்கு அந் நாட்டு நாடாளுமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டுத் தமிழர்கள் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில் அந்தவிருந்து நிகழ்ச்சி முழுக்க முழுக்க கலாசாரத் தொடர்புடையது. அந்த அமைப்பையும், கலந்து கொண்டதற்காக என்னையும் கண்டிப்பவர்கள் கனடாஎதிர்ப்பாளர்கள் என்றார் மார்ட்டின்.
ஐ.ஏ.என்.எஸ்.