கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அறி-வு-ரை-கள்: இ-ப்-போது ஆர்.எம்.வீ -"டர்ன்"
சென்னை:
இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாற்றுக் கருத்து சொல்வதை மதி-முகவும், பாமகவும் --நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் பாதிப்பு ஏற்படும் என்று எம்ஜிஆர்.கழகத் தலைவர்ஆர்.எம்.வீரப்பன் தெ-ரிவித்தார்.-
சென்னையில் அவர் புதன் கிழமை அளித்த பேட்டி:
எம்ஜிஆர் கழகம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருச்சியில் டிசம்பர் -முதல் வாரம்மா-நாடு -நடத்தப்படும். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை பிரச்னையில் தமிழ் ஈழத்தை தமிழக அரசியலில் விவாத பொருளாக்கும் முயற்சியில் சிலர்ஈடுபடுகின்றனர். குறிப்பாக டாக்டர் ராமதாஸ், வைகோ, கிருஷ்ணசாமி ஆகிய கட்சித் தலைவர்கள் சிங்களபிரச்னையை உணர்ச்சிகரமாக விவாதிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இது தேவையற்றது.
இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லாது என்பதில் பிரதமர் வாஜ்பாய் உறுதியாக இருக்கிறார். எனவேஇதுதொடர்பான கருத்துக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், பிரதமரிடம் தான் தெ-ரிவிக்கவேண்டும். இவர்களின் உணர்ச்சிகரமான போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிக்கு பாதிப்பைதான் ஏற்படுத்தும்.
இப்பிரச்னையில் தேசிய ஜன-நா-ய-க கூட்டணியில் சிண்டு முடியும் வேலையில் சில கட்சிகள் ஈடுபடுகின்றன.அதற்கு -நாம் பலியாகி விடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications