தமிழகத்தில் இன்று
மதி-மு-க பே-ர-ணிக்-கு தடை கோ-ரு-கி-ற-து த.மா.கா
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைவர் வைகோ -நடத்தும் பாதுகாப்புப் பேரணிக்கு தடை விதிக்கவேண்டும் என்று தமாகா கோ-ரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பிரச்னையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசி வருகிறார் வைகோ. தமிழர்பிரச்னையை முன் வைத்து அவர் தமிழகத்தில் புலி ஆதரவு போக்கை கடைபிடித்து வருகிறார் என்று தமாகா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து தமாகா பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளஅறிக்கை:
இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நிலைக்கு நேர் எதிராக வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் பேசிவருகின்றனர். அவர்களது கட்சியும் அதே போக்கில் செயல்படுகின்றன.
இப்போக்கு கண்டிக்கத்தக்கது. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்து அவர்கள் அரசியல்நடத்துவது கடும் கண்டனத்திற்கு-ரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இலங்கை பிரச்னையில் தமிழ் ஈழத்தைஆதரிக்க மாட்டோம் என்று -முடிவெடுத்து அறிவித்துள்ளது. அதை ஏற்காமல் மத்திய அரசின் -மு-டிவுக்கு -நர்விரோதமாக வைகோ, ராமதாஸ் பேசி வருகின்றனர்.
எனவே அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். அல்லது தேசிய ஜனநாயகக்கூட்டணியின் -முடிவை ஏற்று செயல்பட வேண்டும்.
இந்-நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி ஒன்றை -நடத்தப் போவதாக வைகோ அறிவித்துள்ளார்.இப்பேரணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று அழகி-ரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications