தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பெண்ணைக் கற்பழித்த இருவருக்கு 19 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை

ஜல்பைகுரி (மேற்கு வங்கம்):

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி என்ற ஊரில் பெண்ணைக் கற்பழித்த 2 பேருக்கு 19 ஆண்டு கால விசாரணக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜல்பைகுரியைச் சேர்ந்தவர் கதீஜா கத்தூன் (13). 1982-ம் ஆண்டு, கதீஜாவுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காசிநாத் திரிபாதி, பூஷன் பரூவா, நானிகோப்ல் கர்மாகர், திரிநாத் சர்கார் ஆகியோர் பின்னகுரி என்ற ஊருக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை வேலை பார்க்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்லாமல், பின்னகுரி பஜார் பகுதியில் வைத்து கற்பழித்தனர்.

நடந்த சம்பவம் குறித்து பனர்ஹாட் போலீஸ் நிலையத்தில் கதீஜா புகார் கொடுத்தார். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது விசாரணைநடந்து வந்தது.

19ஆண்டுகள் கழித்து திங்கள்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜல்பைகுரி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மித்ரா அளித்த தீர்ப்பில், திரிபாதி மற்றும்பரூவாவுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 3000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நானி கோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. திரிநாத் சர்கார், விசாரணையின்போது, 1993-ம்ஆண்டு இறந்து விட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+