For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கும்ப மேளா நடத்த அர-சு ரூ. 55 கோடி நிதியுதவி

லக்னோ:

உலகிலேயே மிகப் பெரிய திருவிழாவான கும்பமேளாவை நடத்த மத்திய அரசு ரூ. 55கோடி நிதியுதவி அளித்துள்ளது.

அலகாபாத் நகரில் அடுத்த ஆண்டு கும்ப மேளா என்று அழைக்கப்படும் மகா கும்பவிழா நடக்கவுள்ளது.

இந்த நூற்றாண்டின் முதல் கும்ப மேளாவான இதற்கு மத்திய அரசு முதல் முறையாகநிதியுதவி செய்துள்ளது. மகா கும்ப விழாவிற்கு மொத்தம் ரூ. 150 கோடி செலவாகும்என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ. 55 கோடியை வழங்கும். இந்தஉதவியின் மூலம், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கலக்கும் திரிவேணிசங்கமத்தின் கரையோரம், நிரந்தரக் குடியிருப்புகளை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

1989-ம் ஆண்டு மகா கும்பம் நடந்தது. அதற்குப் பிறகு 1995-ல் அர்த்த கும்பம்நடந்தது. 1997-ல் கடைசி மகா கும்பம் ஹரித்வார் நகரில் நடந்தது.

அடுத்த ஆண்டுக்கான மகா கும்ப விழா நடக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குமுதல் கட்டப் பணிகள் துவங்கி விட்டன மேளா அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.மழைக் காலம் முடிந்தவுடன் பணிகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X