தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மகனை 30 ஆண்டுகள் வீட்டுக்குள் சிறை வைத்த தாய்

மாட்ரிக்: (ஸ்பெயின்)

மனநிலை பாதிக்கப்பட்ட தன் மகனை தான் வசித்து வந்த குக்கிராமத்தில் வீட்டுக்குள் 30 வருடமாகப் பூட்டி வைத்திருந்த தாய் குறித்து இந்த வாரத்தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்பெயின் நாட்டு டெய்லி எல் பாஸ் என்ற பத்திரிக்கைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் பகுதியில் ரூபியேலா கிராமத்தில் வசித்து வந்த 92 வயது பெண்ணின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் அவரைஎத்தனையோ மருத்துவமனைகளில் காட்டியும் அவர் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த அந்தத் தாய் வேறு எங்கும் தனியாகச் சென்றால் பிரச்சனைகள் வந்து விடும் என்ற காரணத்தால் 7 சதுர அடி பரப்பளவுள்ளதனது வீட்டிலேயே சிறைவைத்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட அந்த மகன் பூட்டிய வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

அந்தத் தாய் தன் மகனுக்கு பூட்டிய அறையிலுள்ள ஜன்னல் வழியே உணவும், நீரும் வழங்கி வருவார் என்றும் அந்தப் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து அந்தத் தாய் கூறுகையில், எனக்கு ஒரே மகன். அவனும் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனை மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லை.எனக்கு ஆதரவு யாருமில்லை. அதனால் தான் என் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து விட்டேன் என்றார்.

தற்போது அவர் அங்குள்ள மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவரது நடவடிக்கையை மருத்துவர்கள் கூர்ந்துகவனித்து வருகிறார்கள் என்றும் டெய்லி எல் பாய்ஸ் செய்தி உறுதிப்படுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+