தமிழகத்தில் இன்று
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு விருது
கோவை:
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் (சிட்ரா), தனது புதிய தொழில்நுட்பமேம்பாட்டிற்காக "தொழில்நுட்பநாள் கண்டுபிடிப்பு விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி, சிட்ராவிற்கு அளித்தார்.
கோவையில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்தலைவராக இந்திரா துரைசாமி இருந்து வருகிறார். இவர் தலைமையில்முத்துக்குமாரசாமி, வசந்தகுமார், இளங்கோ ஆகியோர் அடங்கிய குழு, ஸ்பின்டில்டிரைவ் எனப்படும் இயந்திரப் பகுதியை மேம்படுத்தினர்.
முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டிரைவில் ஒரு டேப்பில் நான்கு கதிர்கள்மட்டுமே இயக்க முடியும். இதனை மேம்படுத்தி, முறையே 8, 12 என்ற வரிசையில்இதனை இயக்கும் வகையில் இந்த குழு மேம்படுத்தியது. இதனால் 8 முதல் 10 சதவீதசக்தியை சேமிக்க முடியும்.
இந்த புதிய மேம்பாட்டை பாராட்டி, இந்த குழுவினருக்கு தொழில்நுட்ப நாள்கண்டுபிடிப்பு விருது வழங்கப்பட்டது. ரூ. 40 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம்அடங்கியது இவ் விருது.











Click it and Unblock the Notifications