கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
கோல் கும்பாஸைப் பாதுகாக்க நடவடிக்கை: அமைச்சர்
பீஜப்பூர்:
கர்நாடக மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோல் கும்பாஸ் நினைவிடத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் கூறியுள்ளார்.
பீஜப்பூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோல் கும்பாஸ் நினைவிடத்தை பாதுகாப்பது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிரைவில் தனது பணியைத் துவக்கும். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தனது அறிக்கையைக்கொடுத்தவுடன் கோல் கும்பாஸைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அனந்த் குமார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications