தமிழகத்தில் இன்று
போர் செய்திக்கான சென்சாரை நீக்கக் கோரி பத்திரிகை ஆசிரியர்கள் வழக்கு
கொழும்பு:
போர் குறித்த செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு அரசு விதித்துள்ள சென்சார் முறை, மனித உரிமைகளை மீறும் விதத்தில் இருப்பதால் அதை நீக்கஉத்தரவிட வேண்டும் என்று கூறி இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்கள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
அவசர நிலையைக் காரணம் காட்டி இலங்கைப் பத்திரிகைகளில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் போர் குறித்து செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு இலங்கை அரசுசென்சார் விதித்துள்ளது. இதன் படி, அரசு அனுமதிக்கும் செய்திகளை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட முடியும்.
சென்சாரை எதிர்த்து பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்துள்ளனர். தங்களது மனுவில், மனித உரிமையை மீறும் விதத்தில் அரசின் சென்சார் முறை உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.