For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஜீப் மீது ரயில் மோதி 8 பேர் சாவு

பெங்களூர்:

கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டத்தில் ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ஜீப் மீது பயணிகள் ரயில் மோதியதில் ஜீப்பில் பயணம் செய்த 8 பேர்இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

சனிக்கிழமை காலை கொப்பால் அருகே நடந்த இவ் விபத்து குறித்து மாநில டிஜிபி சி. தினகர் கூறியதாவது:

கொப்பால் அருகே உள்ள ஆள் இல்லா லெவல் கிராசிங்குக்கு வந்த ஜீப்பின் டிரைவர், ஜீப்பை நிறுத்திவிட்டு, ரயில் வருகிறதா என்று இறங்கி வந்துபார்த்துள்ளார். ரயில் வெகு தூரத்தில் வருவதைத் தெரிந்து கொண்ட அவர், அதற்குள் ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளார்.

ஆனால், ரயிலும் அருகே வர, ரயில் பாதையின் நடுவே ஜீப் பழுதாகி நின்றுவிட்டது. ஜீப்பிலிருந்தவர்கள் அதிலிருந்து இறங்கும் முன்பே, ஜீப் மீது ரயில்மோதிவிட்டது. மிராஜிலிருந்து ஹோஸ்பேட்டைக்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.

சம்பவ இடத்திலேயே 8 பேர் இறந்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார் தினகர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X