ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடமும் இந்தியா தோல்வி
டாக்கா:
பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. இதன் மூலம் இறுதிஆட்டத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா முற்றிலும் இழந்தது.
சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 285 எடுத்தது. கடைசி 3 ஓவரில்மட்டும் 40 ரன்களை அந்த அணி குவித்தது.
இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்ததால் பாகிஸ்தான் அணியினர் அதிகரன்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணியின் யூசுப் யுகானா சிறப்பாக ஆடிசதமடித்தார். அவர் 112 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் 4 விக்கெட் இழப்புக்கு104 ரன்கள் என்ற நிலையில் இருந்தது பாகிஸ்தான். ஆனால், அடுத்து ஆட வந்தயுகானாவும், கேப்டன் மோயின் கானும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை நிலைநிறுத்தினர். மோயின் கான் 46 ரன்கள் எடுத்தார்.
கும்ப்ளே சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் குமரன் 10ஓவரில் 86 ரன்களும், அமித் பண்டாரி 10 ஓவரில் 75 ரன்களு விட்டுக் கொடுத்தனர்.குமரன் தனது கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை கொடுத்தார். அதனால், யுகானாவும்90 ரன்களில் இருந்து சதத்தை எட்டினார்.
50 ஓவரில் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதிபெறலாம் என்ற நிலையில் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இந்தியவீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் அவுட்டாகி திரும்பிச் சென்றவண்ணம் இருந்தனர்.
இதனால், 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது.இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.
ஜடேஜா மட்டும் நின்று ஆடி 103 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 4சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு அடுத்தபடியாக டெண்டுல்கர்25 ரன்களும், திராவிட் 25 ரன்களும், ராபின் சிங் 21 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் அப்துர் ரஸாக் சிறப்பாகப் பந்து வீசி 4 விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீரராக யுகானா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசியக் கோப்பைப் போட்டியில் அடுத்த ஆட்டம் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும்இடையே திங்கள்கிழமை நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் புதன்கிழமைநடைபெற உள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், திங்கள்கிழமைநடைபெறும் ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகும்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications