தமிழகத்தில் இன்று
ஜூ-ன்04, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
3. ஹஸ்தினாபுரம்
அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடு மிரிதிநகர் தேவிக ளாம் (7)
அந்தணர் வீதிக ளாம் - மறை
யாதிக ளாம்கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விக ளாம் - மிகச்
சீர்பெறுஞ் சாத்திரக் கேள்விக ளாம்,
மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம் நவ நீதங்களாம்
சிந்தையி லறமுண் டாம்- எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமு முண்டாம். (8)
மெய்த்தவர் பலருமுண்டாம் - வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்
உய்த்திடு சிவஞானம் - கனித்
தேர்ந்திடு மேலவர் பலருண் டாம்
பொய்த் தவிந் திரசா லம் -நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யும்
கைத்திடு பொய்ம்மொழி யும் - கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம் (9)
மாலைகள் புரண்டசை யும் - பெரு
வரையெனத் திரணவன் தோளுடை யார்,
வேலையும் வாளினை யும் - நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,
காலையும் மாலையிலும் - பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சி கொள் வோர் - கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார் (10)
ஆரிய வேல்மறவர் - புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணரந் தோர்
சீரியல் மதிமுகத் தார் - மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,
வேரியங் கள்ளுருத்தி -எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல் - வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)
நல்லிசை முழக்கங்க ளாம் - பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்!
மல்லிசை போர்களுண்டாம் திரள்
வாய்ந்திவை பார்த்திடு வேர்களுண்டாம் (12)
எண்ணரு கனிவகை யும் - இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்
தண்ணணறுஞ் சாந்தங்க ளும் - மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
கண்ணமும் நறும்புகை யும் - சுரர்
துய்ப்பதற்கு குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகையும் - களி
யுவகையும் கேளியும் ஓங்கின வே. (13)
சிவனுடை நண்பன்என் பார் - வட
திசைசக்கதி பதியள கேசன் - என் பார்
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
தரனுடைத் தொழில் செயும் மாசன மும்
எவனுடைத் தொழில் செயும் மாசனமும்
இருந்திடுந் தண்மையது எழில் நகரே.( 14)
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!