For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்க மர இறக்குமதியாளர்கள் கோரிக்கை

டெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டண உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்தியவேளாண்துறை அமைச்சர் நிதிஷ் குமாருக்கு மர இறக்குமதியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, மர இறக்குமதியாளர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் சஸ்ஜாத்தர்வேஷ் கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரங்களின் மீதான பரிசோதனைக்கட்டணத்தை டன்னுக்கு ரூ.40-லிருந்து ரூ.600-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.இது 1400 சதவீதம் அதிகமாகும்.

மத்திய அரசின் காரணமில்லாத, முன்னரிவிப்பில்லாத இக் கட்டண உயர்வால்இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 600 மர இறக்குமதியாளர்களும், 600-க்கும்அதிகமான சிறு மரத் தொழில் பிரிவுகளும் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆகவே,பரிசோதனைக் கட்டண உயர்வை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.

கட்டண உயர்வால், உள்நாட்டின் மரத் தொழிலும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்.சர்வீஸ் கட்டணத்தையும் டன்னுக்கு ரூ.5 ஆக குறைக்கவேண்டும்.

கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் நிதிஷ் குமாரைச்சந்தித்து மனுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் தர்வேஷ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X