தமிழகத்தில் இன்று
வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை (சென்சார்ஷிப்) நீக்கம்
கொழும்பு:
இலங்கையில் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை (சென்சார்ஷிப்)திங்கள்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால், இலங்கை உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கான தடை தொடரும் என்றுஇலங்கையின் பத்திரிக்கைத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா திங்கள்கிழமைஅறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் வெளிநாட்டுப்பத்திரிக்கைகளுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து அவைகள் மீது விதிக்கப்பட்டசென்சார்ஷிப் தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இனிமேல், வெளிநாட்டுப் பத்திரிகைகள் தங்களது செய்திகளை வெளியிடும்முன்அவற்றை அரசு அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. இனிஅவை தங்களது செய்திகளை நேரடியாக வெளியிட்டுக் கொள்ளலாம்.
தடை நீக்கப்பட்டதால், செய்திகளை நேரடியாக வெளியிட்டுக் கொள்ள அனுமதிகிடைத்தாலும், இலங்கையின் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புணர்வுடன்வெளிநாட்டுப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடும் என்று கருதுகிறேன்.
வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தங்கள் பத்திரிகைகளில்வெளியிட உள்ளூர் பத்திரிகைகள் விரும்பினால், அதுதொடர்பாக அரசிடம் அனுமதிபெறவேண்டும். ஆனால், அவற்றுக்கான தடையும் அடுத்த ஒரு மாதத்துக்குள் விலக்கிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் அமைச்சர் சமரவீரா.
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை துவங்கியதைஅடுத்து அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, செய்திகளைவெளியிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications