தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஆசியாவின் மாபெரும் பழ மார்க்கெட் ரூ. 7 கோடியில் ஆந்திராவில் அமைகிறது

விஜயவாடா:

ஆசியாவிலேயே மிகப் பெரிய பழ மார்க்கெட்டை ஆந்திர அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது.

விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியான நுன்னாவில் ரூ.7.2 கோடி செலவில் இந்த பழ மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. மாம்பழம் இங்கு முக்கியபழமாக அதிக அளவில் விற்கப்படும். அதற்காக, மாம்பழத்துக்கு என்றே தனிப் பகுதி அமைக்கப்படவுள்ளது.

பழ மார்க்கெட் அமைப்பதற்காக ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.1.2 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி உள்கட்டமைப்புகள் கட்டபயன்படுத்தப்படும்.

இந்த மார்க்கெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மார்க்கெட்டை நவீனப்படுத்தும்திட்டத்தின் கீழ் மாம்பழங்களை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படவுள்ளது.

ஐரோப்பியா, வளைகுடா மற்றும் மேற்கத்திய அதிக அளவில் மாம்பழம் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சித் தாக்குதல் இருந்ததால், அவற்றை இறக்குமதி செய்ய அந்த நாடுகள் மறுத்துவிட்டன.

இதைக் கருத்தில் கொண்டு மாம்பழங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் ஏற்படும். மாம்பழங்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடையவேன்கள் பயன்படுத்தப்படும். மேலும், பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க மாம்பழங்கள் நன்றாக பேக் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+