For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புரட்சிக்காரர்கள் கோரிக்கைக்கு பணிய மாட்டோம்: பிஜி ராணுவத் தளபதி

சுவா:

பிஜியில் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியையும், அவரது அமைச்சரவையில் உள்ள 30 பிணைக்கைதிகளையும் விடுவிப்பதற்காக புரட்சிக்காரர்களின்தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கூறும் எந்த கோரிக்கைக்கும் நாங்கள் அடிபணியமாட்டோம் என்று ராணுவத் தளபதி பிராங்க் பெய்னிமாராமா தெரிவித்தார்.

பிஜியில் புரட்சிக்காரர்கள் கடந்த மே 19 ம் தேதி பிரதமர் மகேந்திரபால் செளத்ரியையும், மேலும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களையும்பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இந்த நிலையில் புரட்சிக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ராணுவத்திற்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் பிஜியில்இந்திய வம்சாவழி அரசை நீக்கி விட்டு, பிஜியிலுள்ள பழங்குடி இனமக்கள் கொண்ட இடைக்கால அரசை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜார்ஜ்ஸ்பீட் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் ராணுவத் தளபதி பிராங்க் பெய்னிமராமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புரட்சிக்காரர்கள் நாளுக்குநாள் தங்களது கோரிக்கையைமாற்றி வருகிறார்கள். இனிமேல் அவர்கள் வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்றார்.

ஸ்பீட் ஆதரவு ராணுவத்தினருக்கு எச்சரிக்கை:

நாடாளுமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தினரில் சிலர் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை8.30 மணிக்குள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து வெளியே வராவிட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று ராணுவத் தலைமை எச்சரிககைவிடுத்திருந்தது.

இருப்பினும் ஒரு அதிகாரி, இரண்டு பொறியாளர்கள் தவிர வேறு யாரும் வெளியே வரவில்லை. தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பீடுக்கு ஆதரவாக18 பேர் கொண்ட ராணுவப் படை உள்ளது. மற்ற ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்று ராணவச் செய்தித் தொடர்பாளர் தாராகினிகினிகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X