தமிழகத்தில் இன்று
ஈரானில் 3 கடத்தல்காரர்களைக் கொன்று 6.2 டன் போதைப் பொருள் பறிமுதல்
டெஹ்ரான்:
ஈரான் போலீஸார் போதைப் பொருள் கடத்திய கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திஅவர்களிடமிருந்து 6.2 டன் எடையுள்ள போதைப் பொருட்கப்ை பறிமுதல் செய்தது.இந்த சம்பவத்தில் மூன்று போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் எல்லையில் பாலைவனப் பகுதியில் இந்த போதைப் பொருள் வேட்டைநடந்தது. போலீஸ் துறைத் தலைவர் பிரிகேடியர் மோஷன் அன்சாரி இதுகுறித்துக்கூறுகையில், சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில், நான்குமணி நேரம் கடத்தல்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் சண்டைநடந்தது.
சண்டையின் இறுதியில் மூன்று கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்து 6 டன் ஓபியம், 200 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஒரு வருடத்தில் அதிக அளவு போதைப் பொருள் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும் என்றார்.