தமிழகத்தில் இன்று
கோவை காருண்யா கல்லூரியில் முழுமையான இன்டர்நெட் வசதி
கோவை:
கோயம்புத்தூர் அருகேயுள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் முழு அளவில் இன்டர்நெட் வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சாடிவயல் அருகே அமைந்துள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரியில் இன்டர்நெட் வசதி துவக்கி வைக்கப்பட்டது.
இக்கல்லூரியில் உள்ள மாணவ, மாணவியர் தங்கும் விடுதி உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கல்லூரி வளாகம் முழுவதிலும் 350 கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது. இதனை திங்கள்கிழமை கோவை தொலைத் தொடர்புத் துறைமேலாளர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார்.
இன்டர்நெட் வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், வெளிநிாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் எளிதில்தொடர்பு கொள்ளவும் எளிதாக இருக்கும்.
காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications