தமிழகத்தில் இன்று
தனி ஈழம்: "கருணாநிதி யோசனைக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் தொடர்பில்லை
சென்னை:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ள யோசனைக்கும், இலங்கைைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 3-ம் தேதி நடந்த தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பிய குடியரசுநாடுகள் போல் இரண்டாகப் பிரித்துவிடலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். இந்த யோசனை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக, ஜனா கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி தெரிவித்த யோசனை அவரது சொந்த யோசனையாகும். அதற்கும், இலங்கைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கருணாநிதியின் இந்த யோசனையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் கருத்துக்களும், கூட்டணிக்கட்சிகளின் ஒற்றுமையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இனிமேல் இது போன்ற சிக்கலான பிரச்சினையில் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கருத்துதெரிவிக்கும்படி கூட்டணிக் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.
கருணாநிதி ஒரு சிறந்த அனுபவமிக்க, பொறுப்புள்ள தலைவர். இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான் என்று அவர் கூறுவதைத் தடுக்கயாருக்கும் உரிமையில்லை. மேலும், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு எழுந்தால் அப்போது தனது கருத்தைபிரதமரிடம் தெரிவிக்கவும் அவருக்கு உரிமை உள்ளது.
இலங்கையில் தனி ஈழம் அமைவதை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இலங்கை அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனால்,இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அவர்களது உரிமைகள் காக்கப்பட்டு தக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்என்பதே மத்திய அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஐரோப்பிய குடியரசில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், இலங்கைப்பிரச்சினையில் அப்படி செய்யமுடியாது.
2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பாதிப்பு இருக்கும் என்று தெரியவில்லை.அதற்குள் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ எந்தநிர்பந்தத்தையும் அளிக்கவில்லை என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications