Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தனி ஈழம்: "கருணாநிதி யோசனைக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் தொடர்பில்லை

சென்னை:

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ள யோசனைக்கும், இலங்கைைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 3-ம் தேதி நடந்த தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பிய குடியரசுநாடுகள் போல் இரண்டாகப் பிரித்துவிடலாம் என்ற யோசனையைத் தெரிவித்தார். இந்த யோசனை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, ஜனா கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதி தெரிவித்த யோசனை அவரது சொந்த யோசனையாகும். அதற்கும், இலங்கைப் பிரச்சினையில் மத்தியஅரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கருணாநிதியின் இந்த யோசனையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் கருத்துக்களும், கூட்டணிக்கட்சிகளின் ஒற்றுமையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இனிமேல் இது போன்ற சிக்கலான பிரச்சினையில் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கருத்துதெரிவிக்கும்படி கூட்டணிக் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.

கருணாநிதி ஒரு சிறந்த அனுபவமிக்க, பொறுப்புள்ள தலைவர். இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான் என்று அவர் கூறுவதைத் தடுக்கயாருக்கும் உரிமையில்லை. மேலும், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு எழுந்தால் அப்போது தனது கருத்தைபிரதமரிடம் தெரிவிக்கவும் அவருக்கு உரிமை உள்ளது.

இலங்கையில் தனி ஈழம் அமைவதை பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இலங்கை அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனால்,இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அவர்களது உரிமைகள் காக்கப்பட்டு தக்க வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்என்பதே மத்திய அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஐரோப்பிய குடியரசில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ஆனால், இலங்கைப்பிரச்சினையில் அப்படி செய்யமுடியாது.

2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பாதிப்பு இருக்கும் என்று தெரியவில்லை.அதற்குள் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. மத்திய அரசுக்கோ, பாஜகவுக்கோ எந்தநிர்பந்தத்தையும் அளிக்கவில்லை என்றார் ஜனா கிருஷ்ணமூர்த்தி.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+