தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தகவல் தொடர்புத் துறையில் முழு கல்வியறிவை எட்ட கேரளா முடிவு

திருவனந்தபுரம்:

தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

எழுத்தறிவில் 100 சதவீதத்தை எட்டியுள்ள கேரளம், இப்போது கம்ப்யூட்டர் அறிவியலிலும் முழு கல்வியறிவை எட்டத் திட்டமிட்டுள்ளது. 2010ம்ஆண்டுக்குள் தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, 2001-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 7-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் இடம் பெறுகிறது.2010-ம் ஆண்டிலிருந்து 12-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். மாநில கல்வி அமைச்சர் பி.ஜே.ஜோசப்இத்தகவலைத் தெரிவித்தார்.

ஆறு மாதத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான திட்டத்தின் கீழ் ஏற்கனவே500 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு விட்டது. 1000 ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்நிறுவனம் மூலம் இந்தப் பயிற்சி தரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோசப் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+