தமிழகத்தில் இன்று
ஜூ-ன்06, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
5. துரியோதனன் பொறாமை
(வேறு)
எண்ணிலாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலுஞ் சக்கர மாண்பும்
மண்ணிவர்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையுமாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரிதா ட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர் (19)
(வேறு)
பாண்டவர் முடியுயர்த்தே -இந்தப்
பார்மிசை யுலவிடு நாள்வரை , நான்
ஆண்டதோர் அரசா மோ? - எனது
ஆண்மையும் புகழுமொர் பொருளா மோ?
காண்டகு வில்லுடை யோன் - அந்தக்
காளை யருச்சுனன் கண்களி லும்
மாண்டகு திறல்வீ மன் - தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே! (20)
பாரத நாட்டி லுள்ள - முடிப்
பார்த்திவர் யார்க்குமொர் பதி யென்றே
நாரதன் முதன்முனி வோர் -வந்து
நாட்டிடத் தருமன் அவ் வேள்விசெய் தான்
சோரனவ் வெதுகுலத் தான் - சொலும்
சூழ்ச்சியும் தம்பியர் தோள்வலியும்
வீரமி லாத்தரு மன் - தனை
வேந்தர்தம் முதலென விதித்தன வே (21)
ஆயிரம் முடிவேந் தர் - பதி
னாயிர மாயிரங் குறுநிலத் தார்
மாயிருந் திறைகொணர்ந்தே - அங்கு
வைத்ததொர் வரிசையை மறந்திடவோ?
தூயிழை யாடைகளும் - மணித்
தொடையலும் பொன்னுமொர் தொகைப்படுமோ?
சேயிழை மடவாரும் - பரித்
தேர்களும் கொடுத்தவர் சிறுதொகை யோ? (22)
ஆணிற்பொற் கலசங்களும் -ரவி
யன்னநல் வயிரத்தின் மகுடங்க ளும்
மாணிக்கக் குவியல்களும் - பச்சை
மரகதத் திருமணி தாம் - பல
புதுப்புது வகைகளிற் பொலிவனவும்
காணிக்கை யாக்கொணர்த் தார் - அந்தக்
காட்சியை மறப்பதும் எளிதா மோ? (23)












Click it and Unblock the Notifications