தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய மூப்பனார் விருப்பம்
பாண்டிச்சேரி:
தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாண்டிச்சேரியைப் போல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.மூப்பனார் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி வில்லியனூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் கண்டிப்பாகத் தேவை. பாண்டிச்சேரியில் தற்போது காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இது தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னுதாரணம். சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையவேண்டும் என்றார்.
முன்னதாக விழா ஒன்றில் பேசிய பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம் கூறுகையில், பாண்டிச்சேரியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 73 நாட்களில் மக்கள்விரும்பத்தக்க வகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications