கல்-யா-ணக் கன-வு கண்-டு கம்-பி எண்-ணும் -இ-ளை-ஞர்
தனி ஈழம் தீர்வாகாது: பா.ஜ.க. தலைவர் கூறுகிறார்
கோவை:
இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் தீர்வாகாது என பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன் கூறினார்.
திருப்பூரில் கோவை தொகுதி எம்.பி., ராதாகிருஷ்ணன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது. இதில் மாநிலப் பொதுச் செயலர் இல.கணேசன் கலந்து கொண்டார்.விழா முடிவில் நிருபர்களிடம் தமிழ்நாடு பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் லட்சுமணன் கூறியதாவது:
நீலகிரியில் தேயிலைப் போராட்டத்திற்கு எதிர்க் கட்சிகளின் தூண்டுதலே காரணம். இந்தியாவில் 756 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டுத் தேவையான 650 மில்லியன் போக மீதமுள்ளவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் கட்டாயத்தால் ஒரு லட்சம் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியை தடுத்து நிறுத்த தமிழகபா.ஜ.க, கோரிக்கை விடுத்து வருகிறது.
இலங்கைப் பிரச்சினையில் தமிழர்கள் தனி ஈழம் பெற்று விட்டால் மட்டும் அது தீர்வாக அமைந்து விடாது.
இலங்கைத் தமிழர்களுக்கு முழு உரிமையுடன் கூடிய தனி மாகாணம் அமைத்துத் தர வேண்டும். அங்குள்ள 7.5 லட்சம் மக்களுக்கு இலங்கை அரசுதேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இலங்கைப் பிரச்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடாது என்றமுடிவில் வாஜ்பாய் அரசு உறுதியாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications