ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி சஸ்பெண்ட்
லண்டன்:
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி தீவு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
காமன்வெல்த் அமைப்பின் எட்டு உறுப்பினர் கொண்ட காமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுகூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது. காமன்வெல்த் அமைப்பின் முக்கியக் கவுன்சில்களிலிருந்து இதன்மூலம் பிஜி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிஜி மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக எந்தமுடிவையும் காமன்வெல்த் எடுக்கவில்லை.
பிஜியில் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவர்களுடன் உள்ள29 அமைச்சர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் குழு, தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.
பினைக் கைதிகளை நீக்குவதற்கும், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பிஜிக்குஉயர் மட்டக் குழு ஒன்றை அனுப்பவும் காமன்வெல்த் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மே 19 ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் செளத்ரி மற்றும் பலரை ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலானபுரட்சிக்காரர்கள் சிறை பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இப்போது யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத அளவுக்குபிஜியில் குழப்பம் நிலவுகிறது.
பிஜி நிலவரம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில்,பிஜியில் நடக்கும் கலவரம் மிகவும் மோசமானது. அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சனைகள் ஏறபட்டுவருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கும் ஆபத்து உள்ளது. இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு,சமோவா, டோங்கா நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
இந்த சமயத்தில் பிஜி குறித்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காமன்வெல்த்கூட்டமைப்பிலிருந்து பிஜியை நீக்குவதே சரியான தீர்வு என்றார்.
ஏற்கனவே, 1987 ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தபோது, பிஜி காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.பின்னர் 1997-ல் மீண்டும் சேர்க்கப்பட்டது.
காமன்வெல்த்தால் எதுவும் செய்ய முடியாது: ஸ்பீட்
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி நீக்கப்பட்டது குறித்து புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் பி.பி.சி.டிவிக்கு அளித்த பேட்டியில், இங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு காமன்வெல்த் நாடுகள் எதுவும் செய்ய முடியாது.பிரதமர் செளதிரி உள்பட அமைச்சர்கள் பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளோம்.
பிஜி மக்கள் மிகவும் தலைநகர் சுவாவில் நிலவும குழ்பத்தால் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எங்கள்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாங்கள் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிப்போம் என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications