ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி சஸ்பெண்ட்
லண்டன்:
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி தீவு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
காமன்வெல்த் அமைப்பின் எட்டு உறுப்பினர் கொண்ட காமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுகூட்டத்தில் இந்த முடிவை எடுக்கப்பட்டது. காமன்வெல்த் அமைப்பின் முக்கியக் கவுன்சில்களிலிருந்து இதன்மூலம் பிஜி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிஜி மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக எந்தமுடிவையும் காமன்வெல்த் எடுக்கவில்லை.
பிஜியில் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவர்களுடன் உள்ள29 அமைச்சர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் குழு, தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.
பினைக் கைதிகளை நீக்குவதற்கும், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பிஜிக்குஉயர் மட்டக் குழு ஒன்றை அனுப்பவும் காமன்வெல்த் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மே 19 ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் செளத்ரி மற்றும் பலரை ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலானபுரட்சிக்காரர்கள் சிறை பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இப்போது யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத அளவுக்குபிஜியில் குழப்பம் நிலவுகிறது.
பிஜி நிலவரம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில்,பிஜியில் நடக்கும் கலவரம் மிகவும் மோசமானது. அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சனைகள் ஏறபட்டுவருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கும் ஆபத்து உள்ளது. இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு,சமோவா, டோங்கா நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
இந்த சமயத்தில் பிஜி குறித்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காமன்வெல்த்கூட்டமைப்பிலிருந்து பிஜியை நீக்குவதே சரியான தீர்வு என்றார்.
ஏற்கனவே, 1987 ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தபோது, பிஜி காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது.பின்னர் 1997-ல் மீண்டும் சேர்க்கப்பட்டது.
காமன்வெல்த்தால் எதுவும் செய்ய முடியாது: ஸ்பீட்
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி நீக்கப்பட்டது குறித்து புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் பி.பி.சி.டிவிக்கு அளித்த பேட்டியில், இங்கே நடக்கும் பிரச்சனைகளுக்கு காமன்வெல்த் நாடுகள் எதுவும் செய்ய முடியாது.பிரதமர் செளதிரி உள்பட அமைச்சர்கள் பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளோம்.
பிஜி மக்கள் மிகவும் தலைநகர் சுவாவில் நிலவும குழ்பத்தால் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எங்கள்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாங்கள் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிப்போம் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications