ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

Subscribe to Oneindia Tamil

சியர்ரா லியோனில் 21 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பு

ப்ரீடவுன்:

சியர்ரா லியோனில் 21 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களை புரட்சிகர ஐக்கியமுன்னணி தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.

கிழக்கு சியர்ரா லியோனில் இவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.தீவிரவாதிகள் எதற்காக இந்திய வீரர்களை கடத்திச் சென்றுள்ளனர் என்பது புரியல்லைஎன்று நியூயார்க்கில் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பிரெட் எக்கார்ட் தெரிவித்தார்.

1999-ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கும், சியர்ரா லியோன் அரசுக்கும் இடையே ஏற்பட்டஅமைதி ஒப்பந்தம் மே மாதம் முறிந்தது. ஒப்பந்தத்தை மீறும் வகையில், மே மாதத்துவக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் இறங்கினர். அங்கு ஏற்கனவேபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அமைதி காப்புப் படையினரை அவர்கள்சிறை பிடித்தனர். லைபீரிய அதிபரின் முயற்சிக்குப் பின் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள்விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், 21 இந்திய வீரர்களை தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டுள்ளனர்.இவர்களை மீட்பது குறித்து லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லருடன், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட 500 அமைதி காக்கும் படையினரை மீட்டதில்டெய்லர் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

அன்னான், டெய்லருடன் பேசியது குறித்து பிரெட் எக்கார்ட் கூறுகையில்,தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள அமைதி காக்கும் படையினர்உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அமைதி காக்கும் படையினர் சுமூகமாகதங்களது நடவடிக்கையில் ஈடுபட வழி செய்ய வேண்டும் என்று அன்னான் கேட்டுக்கொண்டார்.

ப்ரீடவுனிலுள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹாஸ்ட் கூறுகையில்,குய்வா என்ற நகரில் அமைதி காக்கும் பணியில் 21 இந்திய வீரர்கள்ஈடுபட்டிருந்தபோது அவர்களை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். குய்வா நகரிலிருந்துஅவர்களை லைபீரியாவுக்கு தீவிரவாதிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

லைபீரியாவில் அவர்களை தீவிரவாதிகள் விடுவிக்கலாம் என்று நம்புகிறோம்.பென்டெம்பு நகர் வழியாக அவர்களை தீவிரவாதிகள் அழைத்துச் சென்றுகொண்டுள்ளனர். இதற்கு முன்பு விடுவிக்கப்பட்ட அமைதி காக்கும் படையினரையும்கூட இந்தப் பாதை வழியாகத்தான் தீவிரவாதிகள் அழைத்துச் சென்றனர் என்றார்விம்ஹாஸ்ட்.

இந்த நிலையில் வன்முறை காரணமாக மகேனி நகரிலிருந்து தப்பி ஓடிய பொதுமக்கள்தற்போது மீண்டும் அந்த நகருக்குத் திரும்பி வரத் துவங்கியுள்ளனர். மே மாதத்துவக்கத்தில் தீவிரவாதிகள் வன்முறையில் இறங்கியதால் இவர்கள், மகேனியின்புறநகர்ப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+