ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
சாலமன் தீவுகள் பிரதமர் பதவி விலக புரட்சிக்காரர்கள் கோரிக்கை
சிட்னி:
சாலமன் தீவுகள் பிரதமர் பர்தொலமேயு உலுஃபாலு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று புரட்சிக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலாய்டன் ஈகிள் ஃபோர்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஹோனியோராவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர்.
தற்போது துப்பாக்கி முனையில் பிரதமரைச் சிறை வைத்துள்ளனர். புரட்சிக்காரர்களன் நிர்பந்தத்தால், தனது பதவியை உலுஃபாலு ராஜிநாமா செய்வார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் ஆன்ட்ரூ நோரி தலைமையில் செயல்பட்டு வரும் ஈகிள்ஸ் அமைப்பு, சாலமன் நாட்டின் முக்கியத் தீவான குவாடல்கெனால் தீவில்மலாய்டன் இன மக்கள் பாதுகாப்பாக வசிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் புரட்சியின் மூலம் தலைநகரை ஈகிள்ஸ் அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் அருகருகே உள்ள தீவுகள் பிஜி மற்றும் சாலமன் தீவுகள். இரு தனித்தனி நாடுகளாக உள்ளன. இரண்டிலும் கடந்த ஒரு மாதத்துக்குள்புரட்சி ஏற்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தாங்கள் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து வைத்துள்ள பிரதமர் உலுஃபாலுவை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நியுசிலாந்துவெளியுறவுத் துறை அமைச்சர் பில் ஜாஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications