For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்-யா-ணக் கன-வு கண்-டு கம்-பி எண்-ணும் -இ-ளை-ஞர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அக்காவை பெண் பார்த்த இளைஞர், அவரது தங்கையை மணம் முடிக்க விரும்பினார். தங்கையோ மறுக்க அவரை தீயில் எரித்து கொன்றார் அந்த இளைஞர்.

சென்னை கே.கே.நகர் 11வது செக்டார் 6வது தெருவில் வசிப்பவர் சுப்ரமணியம்,கட்டிட மேஸ்திரியான இவருக்கு மூன்று பெண்கள். மூத்தவர் வள்ளிக்குதிருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது பெண் லதா. வயது 18. இவருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தார் தந்தை.

அதே பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி தேவராஜ் என்ற இளைஞர் பெண் பார்க்க வந்தார். லதாவை பெண் பார்க்க வந்த இடத்தில் அவரது தங்கைகல்பனாவையும் பார்த்தார். அப்போது எதுவும் சொல்லாமல் சம்மதம் சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்த சில நாட்களில் அக்கா லதாவை விட அவளது தங்கை கல்பனா அவர் கண்ணுக்கு அழகாக தெரிந்தார். எனவே தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு கல்பனாவை மணம் முடித்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். அக்காவை பேசி முடித்தபின்னர் தங்கையை கேட்பது நியாயமல்ல. அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டனர்.

அதையடுத்து பெண்ணின் வீட்டாரிடமும் தேவராஜ் பேசினார். அவரது ஆசை நிறைவேறவில்லை. இதையடுத்து கல்பனாவை சந்தித்து தன் ஆசையை சொன்னார்.அதற்கு அவரும் முடியாது என்று மறுத்து விட்டார்.

சம்பவத்தன்று மாலை கல்பனா வீட்டிற்குச் சென்றார். தனியாக இருந்த கல்பனாவிடம், வந்து விடு நாம் இருவரும் ஓடி விடுவோம் என்று அழைத்தார்.ஆனால், என் அக்காவிற்கு நிச்சயித்த மாப்பிள்ளை நீங்கள்.அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று லதா தீர்-மா-ன-மா-ககூ-றி-யுள்--ளார்.

இந்த தகராறில் இருவருக்-கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை கல்பனா மீதுஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றான் தேவராஜ். 14 வயதான கல்பனா கருகி இறந்தார்.

கல்-யா-ணக் கன-வு கண்-ட தேவராஜ் இப்போது கம்பி எண்ணுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X