தமிழகத்தில் இன்று
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.272 கோடி கடன் உதவி
டெல்லி:
தொலைத் தொடர்புத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.272 கடன் உதவி அளிக்க முன் வந்துள்ளது. இதற்கானஅறிவிப்பை உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டது.
தொலைத் தொடர்புத் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ், வானொலி நிலையங்கள், செல்லுலார் போன்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு,நீண்ட தூர தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகளை கவனித்து வரும் பிரிவுகளை மேம்படுத்தவும், தகவல் தொடர்புத் துறையில் அரசுப் பிரிவுகளின்ஒழுங்குபடுத்தும் பணியை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இது தவிர இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையத்துக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனையின் மூலம் தொழில்நுட்ப உதவவும் அளிக்கப்படும்.இத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.317 கோடி செலவாகும். உலக வங்கியின் நிதி உதவி தவிர்த்த மீதமுள்ள தொகையை இந்திய அரசு செலவிடும்.
யு.என்.ஐ.