கையில் காயம்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து வி-ல-கி-னார் பயஸ்
டெல்லி:
இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் ஆட்டக்காரரான லியாண்டர் பயஸின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் மூன்று மாதங்களுக்கு டென்னிஸ்ஆடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது பாரீஸில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸ் விளையாடி வருகிறார். கலப்பு இரட்டையர் ஆட்டம் ஒன்றில் அவர்விளையாடியபோது, அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
தூர்தர்ஷனின் விளையாட்டு நிகழ்ச்சிக்கு அவர் பாரீஸிலிருந்து அளித்த பேட்டியில், மணிக்கட்டில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படாததால், ஆபரேஷன்தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.
மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், பிரெஞ்சு ஓபன் போட்டியின் இதர ஆட்டங்களில் பயஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடுத்த நடைபெறவுள்ள விம்பிள்டன், டேவிஸ் கோப்பை ஆகிய போட்டிகளிலும் பயஸ் கலந்து கொள்ள முடியாது.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதும் சந்தேகம்:
இதற்கிடையே, அடுத்த ஆண்டு சிட்னியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தான் முடிவுஏதும் எடுக்கவில்லை என்று பயஸ் தெரிவித்துள்ளார்.
பயஸின் பார்ட்னர், மகேஷ் பூபதி, பயஸிடமிருந்து பிரிந்தார். பின்னர் சமீபத்தில் பூபதி அளித்த பேட்டியில் விரைவில் இருவரும் சேர்ந்து விளையாடுவோம் என்றுஅறிவித்தார்.
இதுகுறித்து பயஸிடம் கேட்டபோது, ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தற்போது காயம் அடைந்திருப்பதால் சில காலத்திற்குநான் விளையாட முடியாது. பூபதியுடனான பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசி தீர்வு காண்பேன் என்றார்.
யு.என்.ஐ.