For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

போலிச் சாமியார்கள் உஷார்...எச்சரிக்கிறார் கருணாநிதி

திருவண்ணாமலை:

போலிச்சாமியார்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

அந்தக் காலத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் நடத்துவது மிகவும் கஷ்டம். ஆத்திக முறைப்படி நடந்தால்தான் திருமணங்கள் செல்லும்.இந்த நிலையை மாற்றுவதற்கு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அண்ணா முதல்வர் ஆனபின் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கினார். கடவுள் உண்டு என்பதும், இல்லை என்பதும்அவரவர் விருப்பம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அண்ணாவின் கொள்கை.

இப்போது பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், பெண் கடத்தல், சிறுமி கற்பழிப்பு, போலிச் சாமியார் லீலைகள், பெண்ணை ஏமாற்றியபோலிச் சாமியாருக்கு 10 ஆண்டு ஜெயில் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இதே போன்ற செய்திகளைப் பார்க்கும் போதுபெண்களை வெளியே செல்ல அனுமதிக்கவே பயமாக உள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் சாமியார்களிடம் உஷாராகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X