தமிழகத்தில் இன்று
லாரி-யில் கடத்-த-ப்-பட்-ட 20 கோடி ரூ-பாய் ஹெ-ரா-யின்
சென்னை:
மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தலை தமிழக போலீசார் தடுத்துநிறுத்தியுள்ளனர்.
20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருளை கடத்தல்கும்பலிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகபோதைப் பொருள் தடுப்பு ப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்துபோலீசார் இக்கடத்தலை கண்டுபிடித்தனர்.
மத்திய பிரதேசத்தில் இருந்து ஓசூருக்கு இரும்பு குழாய்களை ஏற்றிக் கொண்டு ஒருலாரி வந்தது. இந்த லாரியை சேலம் - பெங்களூர் சாலையில் போலீசார்மடக்கிப்பிடித்தனர்.
லாரியை சோதனையிட்ட போது, டூல்ஸ்பாக்ஸில் 20 கிலோ ஹெராயின் மறைத்துகடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 20 கோடி ரூபாய்.
இந்தக் கடத்தல் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோபிசிங்குஜார், உத்திரபிரதேசத்தை லாரி கிளீனர் ராகேஷகுமார் தீக்சித், திண்டுக்கல்லை சேர்ந்தஅப்துல் ரஷீத், குலாம் மொய்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அப்துல் ரஷீத் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு 4ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications