தமிழகத்தில் இன்று
இந்-தி-யாவில் சாலைக-ள மேம்படுத்-த உலக வங்கி 516 மில்லியன் டாலர் கடன் உ-த-வி
வாஷிங்டன்:
இந்தியாவில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக உலக வங்கி 516 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
மோசமான சாலைகைள செப்பனிடவும், புதிய சாலைகளை அமைக்கவும், முக்கியத் துறைமுகங்களுக்குச் செல்ல நல்ல பாதை வசதியை ஏற்படுத்தவும் இந்தநிதியுதவி பயன்படுத்தப்படும்.
இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சாலை மேம்பாட்டுப் பணிகள் மூலம் இந்தியாவிலுள்ள சாலைகளின் அவலமான நிலைமாறும். தற்போதுள்ள பல சாலைகள் பலப்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல்கள், பயண நேரம் ஆகியவை பெருமளவு குறையும்.
குறுகலான பல சாலைகளை இரட்டை அல்லது மூன்று வழி கொண்ட சாலைகளாக மாற்றப்படும்.
475 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு, இரண்டு வழிப்பாதையாக உள்ள சாலை, நான்காகவும், நான்கு வழிப் பாதை,ஆறு வழிப் பாதையாகவும் மாற்றப்படும்.
டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையிலான புதிய நெடுஞ்சாலை, 2003-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும்.
ஜம்மு, காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வரையிலான மற்றொரு சாலையும் அமைக்கப்படும். இதேபோல, வட கிழக்கு பகுதியிலுள்ள சில்சார் நகரிலிருந்து,குஜராத்தின் போர்பந்தர் வரை ஒரு சாலையும் அமைக்கப்படும்.













Click it and Unblock the Notifications