கி-ரிக்-கெட் மேட்ச் பிக்ஸிங் வழக்கு: குற்-றம் சாட்-டப்-பட்-ட-வர்-க-ளுக்-கு ஜாமீன்
ஜூ-ன்09, 2000
பாஞ்சாலி சபதம்
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
(வேறு)
உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில் - புகழ்
ஓங்கிநிற் றாரித் தருமனைப் போலெவர்? மாம னே!
இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும் மாம னே! - பொருள்
ஏற்றமும் மாட்சியும் இப்படி யுண்டுசொல்? - மாம னே!
கலைக ளுணர்ந்தநல் வேதியப் பாவலர் செய்தவாம் - பழங்
கற்பனைக் காவியம் பற்பல கற்றனை - மாம னே!
பலகடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கனும் - சொல்லப்
பார்த்ததுண்டோ? கதை கேட்டதுண்டோ? புகல் மாம னே?(42)
எதனை யுலகில் மறப்பினும், யாளினி, மாம னே! இவர்
யாகத்தை என்றும் மறந்திட லென்பதொன் றேது காண்?
விதமுறச் சொன்ன பொருட்குவை யும்பெரிதில்லை காண் - அந்த
வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பலவுண்டே!
இதனை யெலாமவ் விழியற்ற தந்தையின் பாற்சென்றே- சொல்லி,
இங்கிவர் மீதவ னும்பகை எய்திடச் செய்கு வாய்,
மீதமிகு மன்பவர் மீது கொண் டானவன் கேட்கவே - அந்த
வேள்விகண் டென்னுயிர் புண்படுஞ் செய்தி விளம்புவாய் (43)
கண்ணைப் பறிக்கும் அழகுடை யாரிள மங்கையர் - பல
காமரு பொன்மணிப் பூண்க ளணிந்தவர் தம்மை யே
மண்ணைப் புரக்கும் புரவலர் தாமந்த வேள்வியில் - கொண்டு
வாழ்த்தி யளித்தார் பாண்டவர்க் கே, எங்கள் - மாம னே!
எண்ணைப் பழிக்குத் தொகையுடை யாரிள மஞ்சரைப் - பலர்
ஈந்தனர் மன்ன ரிவர் தமக்குத் தொண்டாற்றிய வே!
விண்ணைப் பிளக்குந் தொனியுடைச் சங்குகள் ஊதினார் - தெய்வ
வேதியர் மந்திரத் தோடுபல் வாழ்த்துக்கள் ஓதி னார். (44)
நாரதன் தானும் அவ்வேத வியாசனும் ஆங்ஙனே - பலர்
நானிங் குரைத்தற் கரிய பெருமை முனிவரும்
மாரத வீர, அப் பாண்டவர் வேள்விக்கு வந்ததும், வந்து
மாமறை யாசிகள் கூறிப் பெரும்புகழ் தந்த தும்,
வரர்தம் போரின் அரியநற் சாத்திர வாதங்கள் - பல
விப்பிரர் தம்முன் விளைந்திட உண்மைகள் வீச வே,
சார மறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் - நல்ல
கங்க மழை பொழிந் தாங்கவர்க்கே மகிழ் தந்த தும் (45)