தமிழகத்தில் இன்று
மதமாற்றத்தை சட்டவிரோதமாக அறி-விக்-க -சொ-ல்கி-றார் மடாதிபதி
பூரி:
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்என்று இந்து மத மடாதிபதி கூறி-யுள்-ளார்.
பூரியிலுள்ள சங்கராச்சாரிய சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதி இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வலுக்கட்டாயமாய் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவமதத்திற்கு மாற்றப்பட்ட அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மதத்திற்கே திரும்ப வேண்டும். ஒரிசாவில் உள்ள -பூ-ரியில் இந்து மதத்தைச் சேர்ந்த 72பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.
இது கண்டிக்கத்தக்கது. இவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் சொந்த மதத்திற்கே மாற்றப்பட வேண்டும். இந்துக்கள் யாரும் வலுக்கட்டாயமாய்கிறிஸ்தவர்களாக மாறக்கூடாது.
ஒரிசாவில் நாங்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாய் மாற்றப்பட்டவர்கள் குறித்து சர்வே எடுத்து வருகிறோம்.
உலகம் முழுவதும் இதே போல் மதமாற்றம் நடந்து வருகிறது. இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அதே மதத்திலேயே இருக்க வேண்டும்.அவர்கள் யாரும் வேறு மதத்திற்கு மாற நிர்பந்தப்படுத்தக் கூடாது. கிறிஸ்தவர்களாக மாறிய அனைத்து இந்துக்களும் மீண்டும் தங்கள் சொந்தமதத்திற்கே திரும்ப -அனு-ம-திக்-கப்-ப-ட வேண்டும்.
ஒரிசாவில் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூரில் பகுதியில் இந்துக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவது மனித உரிமையைகொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications