Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சுதாகரன் திருமணத்தை போட்டோ எ-டுக்-க 54,600 ரூபாய் செல-வு

சென்னை:

ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வளர்ப்பு மகன்சுதாகரன் திருமண நிகழ்சிகளை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் சாட்சியம்அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன்சுதாகரன், சசிகலா அண்ணி இளவரசி ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு மீறிசொத்துக்கள் சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் போட்டோகிராபர்ஆறுமுகம் என்பவர் சாட்சி அளித்தார். அவர் தனது சாட்சியத்தில் கூறியதாவது:

புகைப்படத் தொழிலில் 21 வருட அனுபவம் எனக்கு உள்ளது. முன்பு பத்திரிக்கைபுகைப்படக் கலைஞராக பணியாற்றியதால்,அரசியல் தலைவர்களுடன் நெருங்கியநட்பு உண்டு. அந்த வகையில் ஜெயலலிதாவிடமும் அறிமுகம் உண்டு.

1985ல் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் படம் எடுக்கும் பொறுப்பை என்னிடம்அவர் ஒப்படைத்தார். நான்கைந்து நாட்களாக திருமண நிகழ்ச்சிகளை படம்எடுத்தோம். பிரிண்ட் போட்டு 3 ஆல்பமாக தயாரித்துக் கொடுத்தேன். அதற்கு அவர்54 ஆயிரத்து 600 ரூபாய்க்கான கனரா வங்கி செக் கொடுத்தார்.

15.11.1993ல் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் கடன் கேட்டு கடிதம் எழுதினேன்.அதற்கு பதிலும் இல்லை. கடனும் இல்லை. ஜெயலலிதா, அவரது குடும்பத்தினர்சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் எல்லாம் நான் தான் படம் எடுப்பேன்.

சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்டபோட்டோவை நான்தான் எடுத்தேன். அதே போல் இளவரசியின் மகன் விவேக்குடன்ஜெயலலிதா எடுத்துக் கொண்ட போட்டோவும் நான் எடுத்ததுதான்.

அந்த போட்டோக்களின் நெகட்டிவ் அனைத்தையும் சுதாகரன் என்னிடம் இருந்துவாங்கிச் சென்று விட்டார் என்று அவர் சாட்சியம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+