For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தமிழ் பெண்-க-ளை கற்-ப-ழி-க்-கும் இலங்கை ராணுவத்தி-னர்: அ-க-தி-க-ள் கண்-ணீர்

ரா-மேஸ்-வ-ரம்:

இலங்கைப்போரில் தமி-ழர்-க--ள ரா-ணு-வம் கேடயமாக பயன்படுத்தப்பட்-டு வ-ரு-வ-தா-க-வும் இதற்-கா-க தமிழர்களை ரா-ணு-வம்கடத்தி வ-ரு-வ-தா-க-வும் தப்-பி -வந்-த அக-தி-கள் கூ-றி-னர்.

சிங்கள ராணுவ முகாம்களில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் தப்பி வந்த அகதிகள் தெ-ரிவித்தனர்.

இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து தப்பி ராமேஸ்வரம்---தனுஷ்கோடி வந்த 47 அக-தி-க-ளும் -இந்-தி-யா-வுக்-குள்அ-னு-ம-திக்-கப்-பட்-ட-னர். திரிகோணமலையைச் சேர்ந்த சித்ரவேல், அவரது மனைவி கலைமதி ஆகியோர் நிருபர்களிடம்கூறியதாவது..

இலங்கை தலைமன்னாரில் உள்ள சிங்கள ராணுவ -முகாமில் அகதிகள் தங்க வைக்கப்படுகிறார்கள். அங்கு ராணுவத்தினர்கொடுமைப்படுத்துகிறார்கள். சிங்கள ராணுவத்துடன் நடக்கும் சண்டையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகரித்துஉள்ளது.

விடுதலைப் புலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் அதிகம் பேர் பலியான செய்தி கிடைத்து விட்டால் போதும், நாங்கள்சித்ரவதைக்கு ஆளாகி விடுவோம். விடுதலைப்புலிகள் மீது உள்ள கோபத்தை எங்கள் மீது காட்டத்தொடங்கி விடுகிறார்-கள்.இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்கி-றார்-கள். ஆனால், அவர்கள் திரும்பி வருவதே இல்லை.

அவர்களை ராணுவத்தினர் போரில் கேடயமாக பயன்படுத்துகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் சண்டையிடும் பொழுதுதமிழர்களை கேடயமாக -முன் -நிறுத்தி வைத்துக்கொண்டு பின்-னால் மறைந்-து கொண்டு சண்டையிடுகிறார்கள். இதில் தமிழர்கள்உயி-ரி-ழக்-கும் நிலை ஏற்-ப-டு-கி-ற-து.

வயதான தமிழர்களை கூட சில சமயம் கடத்திச்சென்று விடுகிறார்கள் என்று கண்ணீர் சிந்திய-வண்-ணம் கூறி-ன-ர்,

திரிகோணமலை குச்சிவளா என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியான சிவக்குமார், வேலுமயில் ஆகியோர் கூறியதாவது:

தலைமன்னார் முகாமில் எங்களுக்கு பாதுகாப்-பே இல்லை. பெண்கள் அதிக சித்ரவதைக்கு ஆளானோம். தமிழ் பெண்களைராணுவத்தினர் இரவு -நரத்தில் அழைத்துச்சென்று கற்பழித்து விடுகின்றனர். பெண் விடுதலைப்புலி என்று கூறி விசாரணை-நடத்துவதாக அழைத்துச்சென்று இந்த கொடும் செயலில் ஈடுபடுகிறார்கள்.

இளைஞர்களை வேனில் ஏற்றிச்சென்று கட்டாயப்படுத்தி ரத்தம் எடுத்து வருகிறார்கள். இப்படியாக தவித்து வந்தோம். மேலும்இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கு அங்குள்ள சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக உள்ள இ.பி.டி.பி இயக்கத்தினர்தடையாக உள்ளனர்.

தலைமன்னாரில் இன்னும் நிறைய பேர் காத்து -கொண்-டு இருக்கிறார்கள். இலங்கையில் என்று சண்டை ஓய்ந்து நிம்மதியானவாழ்க்கை நடக்குமோ என்று தெ-ரியவில்லை என்ற-னர் பொங்கிவழியும் கண்ணீரு-டன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X