கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தி-ருப்-ப-ர-ங்குன்றம் கோவி-லில் கும்பாபிஷேகம்
மதுரை:
சங்கம் கண்டு தமிழ் வளர்த்த மதுரையிலே தமிழ்க் கடவுள் முருகனுக்கான அறுபடைவீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் கந்தக் கடவுளுக்கு ஞாயிறன்றுசிறப்பாக கும்பாபிஷேகம் நடக்கிறது.
12 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த கும்பாபிஷேகம் நடக்கிறது.
இந்த மகாகும்பாபிஷேகம் ஞாயிறு காலை 5.30 மணிக்கு வெகு விமரிசையாகநடைபெற உள்ளது.
அறுபடை வீடு கண்ட திரு முருகனின் முதல்படை வீடு என்று சிறப்பு பெற்றதுதிருப்பரங்குன்றம்.இங்கு முருகப் பெருமான வள்ளி சமேதராக காட்சி தந்து அருள்புரிந்து வருகிறார்.
கடந்த 88ம் ஆண்டு இந்த கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இதற்கானதிருப்பணிகள் முடிந்து கடந்த 5ம் தேதி மு-ழு மு-தற் கட-வு-ளா-ன விநாயகர் பூஜையுடன்நிகழ்ச்சிகள் துவங்கியது.
கடந்த 8ம் தேதி காலை உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் நாளை நடக்கும்கும்பாபிஷேகத்தில் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்ஆக்யோர் கலந்து கொள்கின்றனர்.
-ஞா---யிற்-றுக்-கி-ழ-மை அதிகாலை 4 மணிக்கு தீபாரதனைகள் முடிந்தவுடன் 4.50 மணிக்குகடங்கள் (பு-னி-த நீர் கு-டங்-கள்) புறப்பாடு நடக்கிறது. 5.50 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications