தமிழகத்தில் இன்று
க-லை பாடத்-தில் 2ம் இடம் பிடித்-த ம-து-ரை மாணவருக்கு 50 ஆயிரம் நிதி
சென்னை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவன் செல்லப்பாண்டி இந்திய -க-லை-கலாச்சார பாடத்தில் 161மதிப்பெண்பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மாணவர் செல்லப்பாண்டியின் தந்தை உசிலம்பட்டியில் முடிதிருத்தும் தொழில்செய்து வருகிறார்.
மாணவர் செல்லப்பாண்டி முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் தனது மேற்படிப்பைத் தொடர தனக்கு எந்தவித வசதியும் இல்லையென்றும்தான் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்து தனக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடமும் நிதியுதவியும், வேண்டுமென்றும்கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முதல்வர் கலைஞர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சியில் இடம்பெற்றுத்தருமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் கலைஞர் அவர்கள் இம்மாணவரின் மேற்படிப்புச் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடஉத்தரவிட்டுள்ளார். இத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புநிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வட்டித் தொகையான 500 ரூபாய் மாதம் தோறும் அக்கழகத்தின் மூலம் நேரடியாக மாணவர்செல்லப்பாண்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications