தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூரில் பெண் கொலை: கலவரம், சாலைமறியல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கிலம்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெண் தன் கணவனால் கொலை செய்யப் பட்டதையடுத்துஅப்பகுதியில் கூடிய கும்பல் ஒன்று அங்கே சாலை மறியலில் ஈடுபட்டது. பல கடைகள் அக்கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், அண்மையில் திருமணமான பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தன் கணவனால் இரும்புக்கம்பியால் அடித்துக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து அப்பெண்ணின் ஊரான தொழுவூர் கிராமத்திலிருந்து கூடிய 300 க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கிலம்பாக்கம் கிராமத்திற்குச் சென்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பெண்ணின் கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினர்.

ஆனால் கொலைக்குற்றவாளியான அப்பெண்ணின் கணவர் சீவப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்து விட்டார்.

போலீஸ் தலையிட்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டனர். இதனால் சென்னை-திருவள்ளூர் தேசியநெடுஞ்சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மீண்டும் கலவரம் ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+