தமிழகத்தில் இன்று
சென்னையில் 4 மாடிக் கட்டிடத்தில் தீ: லட்சக்கணக்கில் சேதம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
வடசென்னையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகள் உடனடியாகச்சென்று தீயை அணைத்தது.
அங்கு வசித்து வந்த நான்கு குழந்தைகள் உள்பட 15 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர். முதலில் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாய்ப் பரவிகொழுந்து விட்டு எரிந்து நான்காவது மாடியில் பற்றிக் கொண்டது.
இந்தத் தீ விபத்தினால் இரண்டாவது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள மரச்சாமான்கள், கம்ப்யூட்டர்கள்எரிந்து சாம்பலாயின. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தீ விபத்து ஏற்பட்ட போது அங்கே ஊழியர்கள் யாரும் இல்லை.
இந்தத் தீ விபத்து மின்சாரக் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சுமார் நான்கு மணிநேர கடும்போராட்டத்திற்குப்பின் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications