தமிழகத்தில் இன்று
--சன்-னை-யில் -வீட்-டில் நிர்-வா-ண-மாய் -கொ-லை-யா-கிக் கிடந்-த பெண்
சென்னை:
சென்னையில் மத்திய அரசு குடியிருப்பில் பூட்டிக்கிடந்த வீட்டில் 45 வயது பெண்ஒருவர் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
நிர்வாணக் கோலத்தில் கிடந்த அப் பெண் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். உடல் அருகில் ஒரு ரம் பாட்டில், பிரியாணிப் பொட்டலங்கள்இருந்தன.
சென்னை கே.கே. நகரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிஉள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிக் கிடந்த -ஒ-ரு வீட்டில் இருந்து அழுகிய-வாடை வீசியதை அடுத்து பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகம் கொண்டு போலீசுக்குபுகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேபுகுந்தனர்.
படுக்கை அறையில் 45 வயதுப் பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகில் ரம் மது பாட்டில் ஒன்று மீதிச் சரக்குடன் இருந்தது.இரண்டு பிரியாணிப் பொட்டலங்களும் இருந்தன. . ஒன்று பிரிக்கப்பட்டு கொஞ்சமாகசாப்பிடப்பட்டுள்ளது. இன்னொன்று பிரிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் அப் பெண்ணின் உடலில் காயங்கள் இருக்கிறதா என்று போலீசார்ஆராய்ந்த போது, கழுத்தில் கயிறால் நெரிக்கப்பட்ட தடம் தெரிந்தது.இதையடுத்து அப்பெண் கழுத்தை நெரித்துக் கொல்லப்படுள்ளார் என்று போலீசார் சந்தேகம்கொண்டுள்ளனர்.
இப் பெண் மத்திய அரசு பணியில் இருப்பவர். பெயர் தமிழ்ச்செல்வி.இவருக்குதிருமணமாகி கணவர் பெருமாள் இறந்து விட்டார்.மகன், மகளை திருமணம் செய்துகொடுத்துவிட்டார். புளியந்தோப்பில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.அவருக்கென ஒதுக்கப்பட்ட இந்த அரசு வீட்டை யுவராஜ் என்பவருக்கு வாடகைக்குவிட்டிருந்தார்.
அரசு விதிமுறைப்படி அரசு குடியிருப்பை வாடகைக்கு விடக் கூடாது. எனவேஅவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட.து. உடனடியாக அந்த வீட்டைக் காலி செய்துதரும்படி அவருக்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் யுவராஜை காலி செய்யும்படி கேட்டு வந்தார். 7ம் தேதி அவர் காலிசெய்து சாவியை தந்து விடுவதாக உறுதி கூறியதாக தெரிகிறது.
அதனால் சாவியை பெறுவதற்காக புளியந்தோப்பில் இருந்து கே.கே.நகர்வந்துள்ளார்.தமிழ்ச் செல்வி. அதன் பின்னர் அவரது உடல் 12ம் தேதிதான்கண்டுபிடிக்கப்பட்டது.