தமிழகத்தில் இன்று
பிகாரில் மீண்-டும் 12 பேர் படுகொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நாவாடா:
பிகாரில் நாவாடா மாவட்டத்தில் உள்ள அட்சார் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒருவர்காயமடைந்தார்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தான் இப்படுகொலையை செய்-தி-ருக்-க வேண்-டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று அட்சார் கிராமத்திற்குள்புகுந்தது. பின்னரா கண்மூடித்தனமாய் ரோட்டில் போவோர் வருவோரை நோக்கிச் சுட்டது. இச்சம்பவத்தில் 12 பேர் குண்டுபாய்ந்த நிலையில் சம்பவஇடத்திலேயே இறந்தனர். சம்பவத்தில் இறந்தவர்கள் அனைவரும் இளவயதினர் என்றனர்.
அப்பகுதியில் உயர்போலீஸ் அதிகாரிகள் தீவிரமாய்க் கண்காணித்து வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.பிகாரின் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படுகொலைச் சம்பவம் நடந்த இடத்தில் பதட்டம் குறைந்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதே மாவட்டத்தில் ராஜேபிகா பகுதியில் ஜூன் 4 ம் தேதி 5 பேர் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்தப் படுகொலைச் சம்பவம் நடந்து பரபரப்பு அடங்குமுன் அதாவது அடுத்த எட்டு நாட்களில் மீண்டும் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications